பிரதமர் மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு முதல் முறையாக அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றுவார்.

அந்த வகையில் இன்று 99-வது மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் அகில இந்திய வானொலி மூலம் உரையாற்றினார். அப்போது உலக அளவில் தூய்மையான ஆற்றல் பிரிவு தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா சூரிய ஆற்றல் பிரிவில் விரைவாக முன்னேறுகிறது. இந்தியாவில் தற்போது அனைத்து பகல் பொழுது தேவைகளுக்காகவும் 100% ஆற்றலை டையூ மாவட்டம் பயன்படுத்துகிறது என்று கூறினார்.