
தமிழகத்தில் விடுபட்டுள்ள 72 சதவீத சுகாதாரத்துறை பணியாளர்கள் விரைவாக ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. உலக அளவில் ஹெபடைடிஸ்-பி வகை கல்லீரல் அலர்ஜியால் பாதிக்கப்பட்ட வருவது அதிகரித்துள்ளது. வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் அந்த நோயை முற்றிலுமாக ஒலிக்கும் நோக்கத்தில் ஹெபடைடிஸ்-பி தேசிய ஒழிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் மருத்துவப் பணியாளர்களுக்கு மூன்று தவணை ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கு மருத்துவ பணியாளர்கள் போதி ஆர்வம் காட்டவில்லை. எனவே விரைவில் அனைவரும் ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.