திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து அரசு போக்குவரத்து கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளை ஆகஸ்ட் 1ஆம் தேதி அதாவது நாளை சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், ஆகஸ்ட் இரண்டாம் தேதி திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து நாளை பிற்பகல் 3,4,5 மணியளவிலும் திருவண்ணாமலையிலிருந்து நாளை மறுநாள் அதிகாலை 3,4,5 மணியளவில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.