தீங்கு விளைவிக்கும் புகையிலைக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்த ஒரு புகையிலை தயாரிப்பும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டால் அதற்கு அரசு தடை விதிக்கு அதிகாரம் உள்ளது என கூறி ஹான்ஸ் பொருளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஹான்சில் 1.8% நிகோடின் கலந்துள்ளது.

இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் அனுமதிக்க முடியாது என அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு புகையிலை பொருள்களையும் தடை விதிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.