இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 20 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதலால் இதுவரை 8,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் மத்திய அரசின் ஆப்ரேஷன் அஜய் திட்டத்தினால் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்கு செல்லும் அனைத்து விதமான விமான சேவைகளையும் ஏர் இந்தியா நிறுவனம் நவம்பர் 2 ஆம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.