இஸ்ரேல் ஹமாஸிடையே 20 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்து தாக்கி வருவதால் இதுவரை 8000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்கள் ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனியர்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்ட கோழைகள் என்று சாடியுள்ளார். மேலும் அமெரிக்கா வழங்கிய உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஆதரவளித்த பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.