வாகன ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே ரத்து செய்யப்பட்ட பயணங்கள் அல்லது தவறான புரிதல்கள் காரணமாக சண்டைகள் நடக்கும் வீடியோக்கள் இணையத்தில் நிரம்பி வழிகின்றன. ஆனால், சமீபத்தில் ஒரு புதிய வீடியோ, ஒருவருக்கொருவர் மரியாதை காட்டுவது இதுபோன்ற தருணங்களை எப்படி முற்றிலும் மாற்றும் என்பதை மக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
வைரலான இந்த வீடியோவில், ஒரு கேப் ஓட்டுநர், தான் 2.5 கிமீ தூரம் வந்து, ஏறக்குறைய 10 நிமிடங்கள் காத்திருந்ததாகவும், ஆனால் பயணி வேறு ஒரு காரை முன்பதிவு செய்துவிட்டதாகவும் கூறுகிறார். ஆனால், மற்றவர்களைப் போலப் பேசாமல் சென்றுவிடாமல், அந்தப் பயணிகள் அவரிடம் வந்து நிலைமையை விளக்கி, அவர் பட்ட சிரமத்திற்காக ₹100 கொடுத்துள்ளனர்.
A cab driver waited for 10 minutes after travelling 2.5 km to reach the customer.
CUSTOMER: Sorry. We got another cab.
DRIVER: Oh 😳
CUSTOMER: Please take this ₹100 for your efforts, Petrol. Sorry again
DRIVER: At least someone understands 😊♥️ pic.twitter.com/l4MDFoYpJV
— News Algebra (@NewsAlgebraIND) December 10, 2025
“>
வீடியோவில் முகம் தெரியாத ஓட்டுநர், “கஸ்டமர் போயிட்டாங்க. நான் வந்து 10 நிமிஷம் ஆச்சு, 2.5 கிமீ தூரத்துலேர்ந்து வந்தேன். அவங்க அமைதியா என் கையில ₹100 கொடுத்துட்டு, ‘பையா, நாங்க ரைடை ரத்து செஞ்சுட்டோம், அதுக்கு மன்னிப்பு’னு சொன்னாங்க.” என்றும், தான் ஏன் பணம் கொடுக்கிறீர்கள் என்று கேட்டபோது, பயணிகள், “வச்சுக்கோங்க, உங்க பெட்ரோல் செலவாகியிருக்கு” என்று பதிலளித்ததாகவும் கூறுகிறார். அதற்கு ஓட்டுநர், “யாரோ ஒருத்தர் இதைப் புரிஞ்சுக்கிறாங்க” என்று சந்தோஷப்பட்டுள்ளார்.
இந்த பாசமான தருணம் ஆன்லைனில் பலரது மனதைத் தொட்டது. இந்த வீடியோ X தளத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தச் செயலைப் பலர் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். “இது கஸ்டமரின் சிறந்த செயல், சிறிய சைகை தான், ஆனால் நிறைய அர்த்தம் உள்ளது” என்றும், “இப்படிப்பட்ட புரிதல் அன்றாட வாழ்க்கையில் மேலும் தேவை” என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
