திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான புத்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வைரக்கல் பதித்த தங்க வேலை பழனி முருகப்பெருமானுக்கு நேற்று காணிக்கையாக வழங்கியுள்ளார். அந்த தங்கவேல் 1.09 கிலோ எடை உடையது.

அந்த வேலை பெற்றுக்கொண்ட கோவில் நிர்வாகத்தினர் மலைக்கோவில் உட்பிரகாரத்தில் இருக்கும் சண்முகர்- வள்ளி தெய்வானைக்கு முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து அந்த வேல் உச்சிக்கால பூஜையில் மூலவர் சிலை அருகே வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கார்த்திகை மாத சஷ்டி மற்றும் விழா காலங்களில் இந்த வேலை முருகப்பெருமானுக்கு சாத்த உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.