உலகம் முழுவதும் ஐடி துறையில் சமீபகாலமாகவே  வேலையிழப்புகள் அதிகரித்துள்ளன. பல முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்தில் மட்டும் தினம் தினம் சுமார் 3000 ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் 166 ஐடி நிறுவனங்கள், 65,000க்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும், இந்த பணி நீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டே தொடங்கிய இந்த பணி நீக்கம் இனி உக்கிரம் அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.