சிரியா நாட்டில் 5 மாடிகள் கொண்ட குடியிருப்பு இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டு 16 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா நாட்டின் அலப்போ என்னும் நகரத்தில் அமைந்திருக்கும் ஐந்து மாடி கொண்ட குடியிருப்பில் 30 நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் திடீரென்று அந்த கட்டிடம் நேற்று இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் மாட்டி குழந்தை உட்பட 16 நபர்கள் பலியாகினர். நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் பலர் இடிபாடுகளில் மாட்டி தவித்துக் கொண்டிருப்பதால், மீட்பு படையினர் அவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்டிடத்தின் அடிப்பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டு பலவீனமடைந்ததால், இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.