சீனர்கள் தங்களுடைய பாரம்பரிய முறைப்படி நிலவை அடிப்படையாகக் கொண்டு லூனார் நியூ இயர் என்று வருடந்தோரும் புத்தாண்டை கொண்டாடு வரு. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள சீனர்கள் நேற்று புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினார்கள். அதன்படி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் உள்ள நடன அரங்கில் புத்தாண்டை ஒட்டி இரண்டு நாட்கள் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று புகுந்து சாராமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சீன புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது மர்மநபர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் நடந்த உடனேயே அந்த பகுதி காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.