ஆந்திர மாநிலம் அனந்தபூரில், நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்க முயன்ற ஸ்விக்கி (Swiggy) டெலிவரி ஊழியர் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்தி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தில் வெறும் 1 முதல் 2 நிமிடங்கள் மட்டுமே நின்றதால், முதல் வகுப்பு ஏசி (1st AC) பெட்டியில் இருந்த பயணிக்கு உணவை வழங்கிவிட்டு அந்த ஊழியர் திரும்புவதற்குள் ரயில் நகரத் தொடங்கிவிட்டது. ஸ்டேஷனுக்கு வெளியே தனது பைக் மற்றும் அடுத்தடுத்த டெலிவரிகள் காத்திருந்த பதற்றத்தில், ஓடும் ரயிலில் இருந்து அவர் கீழே குதித்தபோது நிலைதடுமாறி விழுந்தார்.
⚠️Anantapur, Andhra Pradesh: a Swiggy delivery guy fell while getting down from a moving train due to a 1–2 minute halt.
Passenger was in 1st AC; train started before the handover was completed.
He could have lost his life.
18464 (Prashanti Express) pic.twitter.com/fvjOzqg6kX— Deadly Kalesh (@Deadlykalesh) January 9, 2026
இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. “எந்த ஒரு உணவும் ஒரு மனிதனின் உயிருக்கு ஈடாகாது” என்ற கருத்தை முன்வைத்து பலரும் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். மிகக் குறுகிய நேர இடைவெளியில் உணவை வழங்க முயலும்போது ஏற்படும் இத்தகைய உயிருக்கு ஆபத்தான சூழல்கள், கிக் எக்கானமி (Gig Economy) பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினாலும், இந்தச் சம்பவம் ரயில் நிலையங்களில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
