“தம்பி, நீங்க காசெல்லாம் தராதீங்க, முதல்ல வயிறாரச் சாப்பிடுங்க.. ஆனா உங்க கண்ணுல இருக்குற பசியைவிட உங்களோட தனிமைதான்  என்னைக் கலங்கடிச்சிருச்சு!”

என்று தென்அமெரிக்க நாடான இக்வடாரில் (Ecuador) சாலையோர டகோ (Taco) உணவுக் கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர், பசியோடு வந்த வீடற்ற ஏழை மனிதருக்கு உணவளித்ததோடு மட்டுமின்றி, அவரது தோளைக் கட்டிப்பிடித்து உருகிய நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு விசித்திர லைவ் வீடியோ காட்சி தற்போது சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த இணையவாசிகளையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.

சாப்பாட்டிற்கு வழியின்றி தவித்த அந்த வீடற்ற மனிதர், பசியின் உச்சத்தில் கடையை அணுகித் தன்னிடம் இருந்த சில சில்லறைக் காசுகளைக் கொடுத்து உணவு கேட்டுள்ளார்; ஆனால், அவரது ஏழ்மை நிலையைக் கண்டு நெகிழ்ந்த அந்த வியாபாரி, அவர் தந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டு, அன்போடு ஒரு சுவையான டகோ உணவைத் தயாரித்து வழங்கியுள்ளார்.

உணவை வாங்கிய அந்தப் பெரியவர் கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த போது, அவருக்குத் தற்போது தேவைப்படுவது வெறும் பசி ஆறும் உணவு மட்டுமல்ல, இந்த உலகத்தில் தனக்கென ஒரு ஜீவன் இருக்கிறது என்ற ஆதரவான ஒரு ‘அன்பான அணைப்பு’ (Hug) தான் என்பதை அந்த வியாபாரி உணர்ந்து, அவரைத் தழுவி ஆறுதல் கூறிய நெஞ்சை உருக்கும் காட்சிகள் சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

“>