மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று உத்தர பிரதேசத்தின் கான்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் சத்யதேவ் பச்சௌரி அறிவித்துள்ளார்.

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பிறகு தற்போது அவர் இவ்வாறு அறிவித்திருப்பது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியிட மறுத்து பாஜக தலைமைக்கு இவர் கடிதம் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து புதிய வேட்பாளரை தேடுகிறது பாஜக.