தென்னிந்திய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.10) வேலூர், திருப்பத்தூர், கோவை, ஈரோடு, நீலகிரி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.