தெலுங்கானா மாநிலம் வரதன்னபேட்டையில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் பிளஸ் டூ மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அம்மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சி அடைந்த நான்கு மாணவர்களும் வெற்றியை கொண்டாட ஒரே பைக்கில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த பேருந்து மீது மோதியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.