லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று அதிகாலை ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் 10 பேருடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது திடீரென கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.