பாம்பே உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச், வீட்டில் இயேசு கிறிஸ்துவின் படம் இருந்தால், ஒருவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதாக கருத முடியாது என்று தீர்ப்பளித்தது. அதாவது 17 வயது சிறுமி ஒருவர் தனது சாதியை ‘மஹர்’ என அடையாளப்படுத்தி எஸ்சி சான்றிதழ் வழங்க விண்ணப்பித்தார். ஆனால் அதை அமராவதி மாவட்ட சாதிச் சான்றிதழ் ஆய்வுக் குழு நிராகரித்தது. இந்த வழக்கு குறித்த விசாரணையில் அதை நீதிபதிகள் பிருத்விராஜ், ஊர்மிளா ஜோஷி பால்கே ஆகியோர் கொண்ட அமர்வு நிராகரித்தது.