இந்தியாவில் மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோர உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய அவர், எஸ்சி எஸ்டி குடும்பங்களுக்கு தலா 12 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், இட ஒதுக்கீட்டில் SC பிரிவினருக்கு 18 சதவீதம், ST பிரிவினருக்கு 12 சதவீதம் உயர்த்தப்படும். இரண்டு லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். வேலை இல்லாதவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.