பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் பயம் இருக்கும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழியும் உள்ளது. பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அனைவரும் பயப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் விஷம் தான். ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்கோ அல்லது கொல்ல வேண்டும் என்பதற்கோ அல்ல. மனிதர்கள் தன்னைக் கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தில் தான். மிகவும் ஆபத்தான உயிரினமான பாம்புகளுக்கு புதுச் செடிகள் மிகவும் பிடித்தவை. வீட்டு தோட்டங்களில் பாம்புகள் எளிதாக புகுந்து விடும். சில நேரங்களில் வீட்டுக்குள் நுழைவதற்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படி எதிர்பாராத சமயத்தில் பாம்புகள் வீட்டில் நுழைந்து விட்டால் பயப்பட வேண்டாம். மிக எளிமையான முறையில் பாம்பை எப்படி வெளியேற்றுவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பாம்புகளுக்கு பொதுவாக மண்ணெண்ணெய் வாசனை தாங்க முடியாது என்பதால் வீட்டிற்குள் அது வராது என சொல்லப்படுகிறது. பாம்பு வீட்டுக்குள் புகுந்தால் வீட்டில் மண்ணெண்ணெய் தெளிப்பதன் மூலம் பாம்பை வெளியேற்ற முடியும். இது தொடர்பாக அஸ் அனிமல் என்ற விலங்கு இணையதளம் பாம்புகளுக்கு பிடிக்காத 14 வாசனைகளை தெரிவித்துள்ளது. அதில் பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

அதனைப் போலவே புதினா, கிராம்பு, துளசி, லவங்கப்பட்டை, வினிகர், எலுமிச்சை ஆகியவைகளில் அம்மோனியா வாயு அதிகம் உள்ளதால் அதனை பாம்புகளால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பாம்பு ஒருவேளை வீட்டுக்குள் புகுந்து விட்டால் இந்த பொருட்களை எரிப்பதன் மூலமாக எளிதில் பாம்பை வெளியேற்றலாம். பொதுவாகவே பாம்புகளுக்கு புகையும் எதிரி தான். அதனால் புகையால் பாம்புகளை விரட்ட முடியும். இந்த பொருள்கள் அதிகம் உங்கள் வீட்டில் இருந்தால் பாம்புகள் வருவதை தடுக்க முடிவதுடன் பாம்பு வீட்டில் புகுந்தாலும் எளிமையாக வெளியேற்றலாம்.