முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சமூக நீதி காவலர் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூக நீதிக்காக போராடிய தலைவர்களுக்கு இந்த அரசு எப்போதும் கடமைப்பட்டுள்ளது. வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது. தந்தை பெரியார் மற்றும் கலைஞர் ஆகியோரை மிகவும் மதித்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர். தலைய காரணத்தால் அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.