தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது உள்ள இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றார். இதனால் மீதம் இரண்டு பேர் மட்டுமே பதவியில் உள்ளனர். தற்போது தலைவர் பதவியும் பெற உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளது. இதனை தொடர்ந்து துறை சார்ந்த பணிகளில் தோய்வு ஏற்பட்டு அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் முதன்மை பணிகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் வரும் ஜூன் மாதம் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற உள்ளதால் டிஎன்பிஎஸ்சி இன் புதிய தலைவராக அவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதற்காகவே தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.