இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற முடியும். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இரண்டு ஹேக்ட்டருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் இணைய முடியும். வயது 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். இதில் இணைந்த பிறகு விவசாயிகள் 60 வயது வரை மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை முதலீடு செய்து வந்தால் 60 வயதிற்கு பிறகு மாத ஓய்வூதியமாக 3000 ரூபாய் கிடைக்கும். ஒருவேளை விவசாயி உயிரிழந்து விட்டால் ஓய்வூதியம் அவரின் மனைவிக்கு 50 சதவீதம் ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு.