புதுச்சேரியில் டுபாக்கூர் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். புதுச்சேரியில் நடைபயணம் மேற்கொண்ட காங்கிரஸார் பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் குறித்து மக்களிடம் விளங்கினர்.

அப்போது பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் நடக்கும் அனைத்து ஊழல்களுக்கும் முதலமைச்சர் ரங்கசாமியே தலைமை தாங்குகிறார் என்றும் அவர் புதுச்சேரியின் கலாச்சாரத்தை அழித்து விட்டார் எனவும் தெரிவித்தார்.