இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் வகையில் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகள் ஏழு சதவீத வட்டியுடன் 3 லட்சம் ரூபாய் வரை உரிய காலத்தில் கடன் பெறலாம்.

விவசாயிகள் எந்தவித பத்திரப்பதிவும் செலுத்த தேவையில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்தினால் மூன்று சதவீதம் வட்டி சலுகை கிடைக்கும். இது பிரதம மந்திரி பசல் பீமா யோஜனாவுடன் இணைக்கப்பட்டது. இதற்காக உள்ளூர் வங்கிகளை விவசாயிகள் அணுகலாம்.