இ- டிஎல் மற்றும் இஆர்சி குறித்த விழிப்புணர்வு தொடர்பான முதல் கூட்டம் ஜெய்ப்பூர் ஆர்டிஓவில் நடைபெற்றது. இதில் இ டிரைவிங் லைசன்ஸ் மற்றும் இ ஆர்சி வழங்குவதன் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. போக்குவரத்து துறை உரிமங்கள் மற்றும் RC ஸ்மார்ட் கார்டுகள் ஆகிய இரண்டு முக்கிய ஆவணங்களும் மொபைலில் ஆன்லைன் படிவத்தில் வழங்கப்படும். மேலும் லைசன்ஸ் , ஆர்சிக்கு 200 ரூபாய் கட்டணம் இனி வசூலிக்கப்படாது.

சாதாரண மக்களுக்கு வீட்டில் அமர்ந்து உரிமம் வழங்குவது போன்ற வசதிகளை இ-டிஎல் மற்றும் இ-ஆர்சிக்கு வழங்குவதற்கு அரசு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் மொபைல், இ- மித்ரா அல்லது அலுவலக மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த புதிய வசதி நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் வசதிகளை எளிதாக பெறுவதற்கும் உதவும் என அரசு தெரிவித்துள்ளது.