அதிக வெப்பமான இடங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்த நிலையில் பிறப்பு போன்ற அபாயம் அதிகம் என்று இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. சென்னையில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்று 2017 முதல் தற்போது வரை  தமிழகத்தில் வெப்பமான சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் பணிபுரிந்து வரும் 800 கர்ப்பிணி பெண்களை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .

இந்த பெண்கள் விவசாயம், செங்கல் உற்பத்தி மற்றும் உப்பு உற்பத்தி போன்ற தொழில்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதில் 5% பேருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . அதே நேரத்தில் குழந்தை இறந்து பிறப்பது மற்றும் முன்கூட்டியே பிறப்பது 6.1% உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.