கர்நாடகா மாநிலம் துமகூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பீம்சங்கர். இவர் தனது பள்ளியில் ரிலே ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். போட்டி முடிந்து சிறிது நிமிடங்களிலேயே பீம்சங்கர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பீம்சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும் போது போட்டியில் இரண்டாவது வந்த சோகத்தில் இவ்வாறு நடந்து இருக்கலாம் என்று கூறியுள்ளார்.