கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு தினம்தோறும் காலை 6.30 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் ஜனவரி 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஈரோடு வரையும், ஜனவரி 19, 23, 25,30 ஆகிய தேதிகளில் கரூர் வரையும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக திருச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு பகல் ஒரு மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ஜனவரி 19, 23,25,30 ஆகிய தேதிகளில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே பயணிகள் இதற்கு ஏற்றது போல தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்வது நல்லது.