தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்பாக நாளை மறுநாள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நேற்று அமைச்சர் சிவசங்கருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தால் ஸ்ட்ரைக் உறுதி.