விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில்  நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று  காலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு சார்பில் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து குவாரி நிர்வாகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு  தலா ரூ. 12 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் அதன்படி நேற்று  ரொக்கமாக தலா ரூ‌.50,000 வழங்கியுள்ள நிலையில் காசோலையாக ரூ.11.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.