கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று நாக்பூரிலிருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை தேள் கடித்தது. இதையடுத்து உடனே பயணியை மருத்துவர் ஒருவர் பரிசோதித்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் விமான நிறுவனம் சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

ஏப்ரல் 23, 2023 அன்று ஏர் இந்தியா வெளியிட்ட இறுதி அறிக்கையில், எண் AI-630 எனும் விமானத்தில் பயணி ஒருவருக்கு தேள் கொட்டியதால் மிகவும் அரிதான மற்றும் துரதிர்ஷ்டவசமான விபத்து ஏற்பட்டது. அதன்பின் நெறிமுறை பின்பற்றப்பட்டு விமானத்தை முழுமையாக ஆய்வு மேற்கொண்ட பிறகு தேள் அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான முறையான செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.