பிரபல இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் வலம் வந்த விஜய் ஆண்டனி, கடந்த 2012ம் வருடம் வெளியாகிய “நான்” திரைப்படத்தின் மூலம் நடிகராக களமிறங்கினார். இதையடுத்து இவர் பல்வேறு படங்களில் நடித்து திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தார். அண்மையில் இவர் பிச்சைக்காரன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கினார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை வாயிலாக தற்போது குணமாகி வருகிறார்.

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்-2 படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்கள் இவர் நடிப்பில் உருவாகி உள்ளது. இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் 3 திரைப்படங்களை எந்த நிறுவனமும் வாங்க முன்வரவில்லையாம். இதனால் ரத்தம் திரைப்படத்தின் இயக்குனர் சி.எஸ் அமுதன் நேரடியாக உதயநிதியை சந்தித்து இதுபற்றி பேசியுள்ளார். ஆனால் அவரும் எந்த உதவியும் செய்யவில்லையாம்.