திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில், “தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிர்களை இழந்தது வருத்தமளிக்கிறது.

வேன் மீது லாரி மோதியதில் உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல் . உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.