தமிழகத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மார்ச் 15 இன்று , நாளை, மார்ச் 17 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ஏதுவாக கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை மற்றும் நெல்லைக்கு இன்று 360 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அதனைப் போலவே  நாகர்கோவில், குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கும் இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.