தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரண பொருட்களில் விஜய் படத்தை ஒட்ட வேண்டாம் என்று மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். உணவு அளிக்கும் போது விஜய் போட்டோ உடன் ஒரு நபர் வரும் வீடியோவும் நிவாரண பொருட்களின் மேல் விஜய் ஸ்டிக்கர் ஒட்டியதும் சர்ச்சையை கிளப்பியது. இதனை கண்டித்து இது போன்ற விஷயங்களை நிர்வாகிகள் தவிர்க்கும்படி தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.