நடிகர் விஜய் கேட்டவுடன் உதவி செய்வார் என நடிகர் ராகவாலாரன்ஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடன இயக்குனர், நடிகர், டைரக்டர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் திரைப்படம்தான் “ருத்ரன்”. இந்த படத்தின் வாயிலாக பைவ் ஸ்டார் கதிரேசன் டைரக்டராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்நிலையில்  சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், தமிழ் சினிமாவில் தன்னுடைய ஆல் டைம் நண்பர் என்றால் விஜய்யைதான் கூறுவேன்.

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. தனது தொண்டு நிறுவனத்திற்கோ இல்லை குழந்தைகளுக்கு ஏதேனும் உதவி தேவை என்றோ அவருக்கு ஒரு போன் கால் செய்தால் போதும், அனைத்தும் வந்துவிடும் என தெரிவித்தார்.