தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் புதியபாதை என்ற படத்தில் மூலமாக இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தார். இவர் இயக்கிய ஒத்த சிறப்பு திரைப்படம் விருதுகள் வாங்கி குவித்தது. இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளையும் பெற்றது. இந்த நிலையில் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பார்த்திபன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதாவது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருந்த பொழுது பாக்கியராஜ் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். புதுக்கவிதை என்ற படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த்தோடு பல காட்சிகளில் நடித்திருந்தார். அதன் பிறகு நாம் பெரும் நடிகராக போகிறோம் நாமும் சூப்பர் ஸ்டார் மாதிரி ஆகணும் என்று பார்த்திபன் ஆசைப்பட்டாராம். படம் வெளியான பொழுது அவர் தம்பியை அழைத்துக்கொண்டு சினிமாவிற்கு சென்றார். அப்போது தம்பி நீ மட்டும் படத்தை பார்த்து விட்டு வா.

நான் படத்திற்கு வந்தால் மக்கள் கூட்டம் கூடிவிடும். நீ பார்த்துவிட்டு படம் நான் எப்படி நடித்துள்ளேன் என்று சொல்லு என்று கூறியிருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு வந்த தம்பியோ இந்த ஷோவில் நீ நடித்த எந்த சீனும் இல்லை என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பார்த்திபனுக்கு அப்போதுதான் புரிந்துள்ளது. இவர் நடித்த அனைத்து காட்சிகளுமே நீக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் சினிமா மீது ஒரு வெறுப்பு வந்தது என்று கூறியுள்ளார்