தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார்.

அதன் பிறகு பேசிய கார்த்தி, கேப்டன் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாமல் போனது என் வாழ்நாள் முழுவதும் குறையாகவே இருக்கும் என உருக்கமாக தெரிவித்துள்ளார். வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பில் கேப்டனுக்கு இரங்கல் கூட்டம் நடைபெறும் என அறிவித்த அவர் விஜயகாந்த் புகழ் நிலைத்து நிற்கும் வகையில் அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.