சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பேசுகையில், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அதனைப் போலவே முதியோர் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில் கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக முதியோருக்கான தனி மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது. மேலும் கொரோனா பேரிடருக்கு பிறகு இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளதாகவும் இதனை தவிர்க்க இதயம் காப்போம் என்ற திட்டம் சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.