தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு தேமுதிக தலைமை மறுப்பு தெரிவித்திருந்தது. இது குறித்து பேசி உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், தொடர் இருமல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிறுநீரக மாற்று செய்யப்பட்டிருப்பதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் உள்ளார் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.