அதிமுக எம்.எல்ஏ ஓ.எஸ் மணியன் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். ஓ எஸ் மணியன் தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் எஸ்.கே. வேதரத்தினம் வழக்கு தொடர்ந்தார். 2021 தேர்தலில் அதிமுக எம்எல்ஏ ஓஎஸ் மணியன் வெற்றியை எதிர்த்து திமுகவின் வேதரத்தினம் வழக்கு தொடர்ந்தார்.

தேர்தல் நேரத்தில் ஒஎஸ் மணியன் 60 கோடி பணப்பட்டுவாடா செய்ததாக மனுதாரர் வழக்கு தொடர்ந்தார்.
ரூபாய் 60 கோடி அளவிற்கு பணம் பட்டுவாடா செய்ததாகவும், பரிசு பொருட்களுக்கான டோக்கன் விநியோகித்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஒ எஸ் மணியன்.