தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த நவம்பர் 18ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதன் பிறகு 15 நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் உடல் நிலையில் பின்னடைவை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் ஆர் கே செல்வமணி உள்ளிட்டோர் விஜயகாந்தை நேரில் சென்று நலம் விசாரித்தனர். தற்போது அவர் பேச முடியாத நிலையில் இருப்பதால் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளனர்.