தமிழகத்தில் புயல் எதிரொலியால் டிசம்பர் நான்காம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் நாளை 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் நாளை மறுநாள் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் நான்காம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற மாவட்டங்களிலும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.