தமிழக பாஜக வெளியிட்ட மக்களவைத் தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட அவர்களது தீவிர விசுவாசிகள் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இது கமலாலயத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் அதிகார போட்டியில் தற்போது கேசவ விநாயகத்தின் கை ஓங்கி உள்ளதை காட்டுகிறது என்கிறது விவரம் அறிந்த வட்டாரம். இதனால் அண்ணாமலை கடும் கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.