கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் இணைந்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்திருப்பது அச்சாணி இல்லாத கூட்டணி என்று ஜெயக்குமார் விமர்சித்தது குறித்து பேசிய போது,

“ஒரு கட்சிக்கு அச்சாணி என்றால் அது விசுவாசம் மிக்க தொண்டர்கள் தான். இவர்கள் விசுவாசம் என்றால் என்னவென்று கேட்பவர்கள் கிலோ எவ்வளவு என்று கேட்பார்கள்” என கூறியுள்ளார். மேலும் நாங்கள் மாநில அரசை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தான் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம் என்றும் கூறியுள்ளார்.