கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் இணைந்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,

“நானும் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் மாநில அரசு விரைந்து கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எச்சரிக்கை கொடுக்கும் விதமாக தான் ஆர்ப்பாட்டம் மேற்கொள்கிறோம். ஜெயக்குமார் தான் இந்த கொலைக் கொல்லைக்கு காரணம் என்றா கூறினோம்? எதற்காக ஜெயக்குமார் சந்துல சிந்து பாடுகிறார்?  ஏன் அவர் எங்கள் கட்சி பற்றி பேசுகிறார்?” என கேட்டுள்ளார்.