சேலம் மாவட்டத்தில் உள்ள அமாலகொண்டலாம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிரசர் மேடு பகுதியில் வாஷிங் பவுடர், சோப்பு ஆயில் ஆகியவற்றை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது ராமச்சந்திரன் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கே.பரமத்தி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.