பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நம்முடைய திறன்களை அதிகரித்து ரிஸ்க் எடுப்பது தான் புதிய வாழ்க்கை முறை என்று தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மனிதனுக்கு வேலை கிடைத்து அவனுடைய வாழ்க்கையை சந்தோசமாக வாழும் நாட்கள் குறைந்துவிட்டது. தற்போதைய சூழ்நிலையில் தொழில், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களை அவ்வப்போதும் மேம்படுத்த வேண்டும். ஏனென்றால் மனிதனுடைய தேவை மாறுகிறது. அது மட்டுமல்லாமல் வேலைமுறையும் மாறுகிறது. அதுமட்டுமின்றி வேலையில்லா திண்டாட்டம் கடந்த ஆறு வருடங்களாக இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.