சதுரங்க வேட்டை, துணிவு, தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் ஹெச்.வினோத். இவர் அதிகமாக பொது வெளியில் பேசி பார்த்திருக்க முடியாது. அப்படியும் பேசினால் கூட அதில் சில அர்த்தங்கள் நிறைந்திருக்கும். இந்த நிலையில் இவர் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசி உள்ள ஒரு சில விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது. அதில் பேசிய இவர், பிசினஸ் எங்கு இருக்கிறதோ அங்கு நாம் கண்டிப்பாக நேர்மையாக இருக்க முடியாது.

கடைசி விவசாயி படத்திற்கு இன்னும் அதிகமான வரவேற்பை கொடுத்து இருக்க வேண்டும். அது ஒரு அழகான திரைப்படம். கடந்த மாதம் வெளியான வாரிசு, துணிவு படங்கள் இரண்டுமே கொண்டாடப்பட்டன. ஆனாலும் தமிழ் சினிமாவில் நல்ல கதையை கொண்ட சிறிய படங்கள் கொண்டாடப் படுவதில்லை. அப்போது, வாரிசு, துணிவு படங்களுக்கு கொடுத்த வரவேற்பை ‘கடைசி விவசாயி’ படத்திற்கு கொடுத்திருக்க வேண்டும் என்று விழா மேடையிலேயே மனம் திறந்து பேசியுள்ளார் துணிவு பட இயக்குநர் ஹெச். வினோத்.